தொடர் மழை காணமாக கர்நாடக தலைநகர் பெங்களூர் நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பிரதான சாலைகளில் மழை நீர் ஆறு போல ஓடுகிறது.பொதுவாகவே பெங்களூர் போக்குவரத்து நெரிசலுக்கு பேர் போன நகரம். இப்போது மழைநீரும் சலைகளில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாரத்தஹள்ளி சில்க் போர்ட் சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகள் வெள்ளித்தில் மூழ்கியுள்ளது.