• Fri. Mar 29th, 2024

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 45-ஆக உயர்வு.. இன்று மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இதுவரை 45 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவத்துறை தகவல் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை கூறியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டோரில் சென்னையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 45 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவத்துறை தகவல் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *