இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனப்படையினர்
கொடிய ஆயுதங்களை ஏந்தி வந்து, இந்திய படைவீரர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய படை வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மோதலின்போது சீனப்படையினர் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து, எல்லையில் இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் தொடர்ந்தது. பதற்றத்தைத் தணிப்பதற்கு இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் பலனாக மோதல் புள்ளிகளில் சிலவற்றில் இருந்து இரு தரப்பும் படைளை விலக்கின. இதனால் சற்றே பதற்றம் தணிந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 9-ம் தேதியன்று அருணாசலபிரதேச மாநிலத்தில்,
தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் சீனா மீண்டும் வாலாட்டி அடாவடியில் ஈடுபட்டது. எல்லைக்குள் ஊடுருவி இதுவரை இருந்து வந்த நிலைமையை மாற்ற முயற்சித்தது. ஆனால் இந்திய படைவீரர்கள் சரியான பதிலடி கொடுத்ததால், சீனப்படை ஓட்டம் எடுத்தது. இந்த மோதலில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு தரப்பு படைத்தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த தகவல்களை இந்திய ராணுவ வட்டாரங்கள் நேற்று முன்தினம்
வெளியிட்டன. இது நாடெங்கும் அதிர் வலைகளை ஏற்படுத்தின.
அதைத்தொடர்ந்து இந்திய, சீன எல்லை மோதல் விவகாரத்தை மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உறுப்பினர் ஒவைசி உள்ளிட்டோர் எழுப்பினர். இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் அளிக்கையில், இந்த விவகாரத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மதியம் 12 மணிக்கு அறிக்கை அளித்து பேசுவார் என தெரிவித்தார். ஆனால் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, உடனே இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஓங்கிக்குரல் கொடுத்தன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியால் சபையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
இதே பிரச்சினை, மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. அங்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இந்த விவகாரத்தை எழுப்பி பேசினார். அப்போது, இந்த விவகாரத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மதியம் 12.30 மணிக்கு அறிக்கை அளித்து பேசுவார் என அவை முன்னவர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
ஆனால் இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் உடனே விவாதிக்க வலியுறுத்தி, அவையில் அமளியில் ஈடுபட்டதால் சபையை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.

பின்னர் மக்களவையும், மாநிலங்களவையும் கூடியபோது, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இரு அவைகளிலும் அடுத்தடுத்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நமது எல்லையில் தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் கடந்த 9-ம் தேதி நடந்த சம்பவம் பற்றி சபைக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன். 9-ம் தேதியன்று, தவாங் செக்டரில் யாங்ட்சி பகுதியில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனப்படையினர் அத்துமீறி, தற்போதைய நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதை நமது படை வீரர்கள் மிகுந்த உறுதியுடனும், தீர்க்கமுடனும் எதிர்த்தனர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு மோதலில் கைகலப்பு ஏற்பட்டது. உயிரிழப்பு இல்லை நமது எல்லைப்பகுதிக்குள் அவர்கள் அத்துமீறி நுழைய முயற்சித்தபோது நமது ராணுவம் துணிச்சலுடன் தடுத்தது. அவர்களை தங்கள் நிலைகளுக்கு திரும்ப வைத்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆனால் நமது தரப்பில் வீரர்கள் உயிரிழப்பு இல்லை; வீரர்கள் யாரும் படுகாயம் அடையவும் இல்லை.
நமது படைத்தலைவர்கள் சரியான நேரத்தில் தலையிட்டதால், சீனப்படையினர்
தங்கள் இடங்களுக்கு பின்வாங்கி விட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள நமது படைத்தலைவர் கொடி சந்திப்பு ஒன்றை, சீன தரப்புடன் 11-ந் தேதி நடத்தினார். அதில் இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே நிறுவப்பட்ட வழிமுறைகளின்படி அவர்கள் விவாதித்தனர். இத்தகைய செயல்களில் இருந்து சீனப்படையினர் விலகி இருப்பதுடன், எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் பராமரிக்குமாறு கூறப்பட்டது. மேலும் இந்த பிரச்சினை, தூதரக வழிகளில் சீன தரப்பிடம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.இவ்வாறு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]