• Fri. May 17th, 2024

மதுரையில் ஆட்டோ நிறுத்தி ஆள் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை.., ஆட்டோ ஓட்டுநர் கல்லால் அடித்து கொலை…

ByM.Bala murugan

Nov 6, 2023

மதுரை நேதாஜி சாலை பகுதியில் ஆட்டோவை நிறுத்தி ஆள் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர்கள் இண்டு பேர் சேர்ந்து கல்லால் அடித்து எம்.கே புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (45) என்பவரை கொலை செய்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திலகர் திடல் போலீசார் உடலை கைபற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *