ஜெயங்கொண்டம் நகராட்சி முன் நேற்று காலை முதல் தூய்மை பணியாளர்கள் வேலை கேட்டு ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலை 7 மணி அளவில், ஆணையர், விசிகாவை சேர்ந்த நகராட்சி தலைவரின் கணவர், திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர், மதிமுக கவுன்சிலரின் கணவர் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளிலும், சுமார் 18 வருடங்களாக 134 பேர் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். 40 பேர் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்ததாக பொதுமக்களால் பாராட்டப்பட்ட தூய்மை பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் நாள் ஒன்றுக்கு 385 ரூபாய் சம்பளம் ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் 270 சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.18 வருடங்களாக ஒவ்வொருவருக்கும் இதுவரை இபிஎப் 22 ஆயிரம் ரூபாய் பிடித்த செய்யப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொருவருக்கும் 46 ஆயிரம் ரூபாய் சம்பள பாக்கி உள்ளது. தற்பொழுது புதிதாக ஒருவர் ஒப்பந்தம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஒப்பந்ததாரிடம் இருந்து ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த திமுக வை சேர்ந்த முக்கிய நபர் சப் ஒப்பந்ததாரராக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சப் ஒப்பந்ததாரர் தூய்மை பணியாளர்கள் 34 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி இருந்தால் மட்டுமே பணி வழங்கப்படும் என்று கூறியது டன். 73 தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமே வேலை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் 18 வருடங்களாக பணிபுரிந்து தற்போது வேலை இழந்துள்ளனர். இது குறித்து தொழிற்சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் உட்பட வேலை இழந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் நகராட்சி முன் நேற்று மாலை முதல் வேலை உறுதி கடந்த 25ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலை 8 மணி அளவில் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் இரண்டு மாதத்திற்கு அனைவருக்கும் வேலை வழங்கப்படும் நீதிமன்ற உத்தரவு படி பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று காலை புதிய ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது இதை அறிந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை முதல்வேலை கேட்டு ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை 7 மணி அளவில் ஆணையர் மூர்த்தி, விசிகவைச் சேர்ந்த நகராட்சி தலைவர் சுமதிக்கு பதில் அவரது கணவர் சிவக்குமார், திமுக நகர தலைவரும் துணைத் தலைவருமான கருணாநிதி, மதிமுக கவுன்சிலருக்கு பதில் அவரது கணவரான புகழேந்தி, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இலக்கிய தாசன் உட்பட சிலர் ஆணையர் (ரூமில்) அறையில். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்களை வெளியேறச் சொல்லி வெளியேற்றிவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]