• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

2 நாள்தான் டைம் இல்லாவிட்டால் இலங்கை அவ்வளவுதான்..
2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் – இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ByA.Tamilselvan

May 12, 2022

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜபக்சே பிரதமர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என எதிர்கட்சிகள்,பொதுமக்கள்போராடி வருகின்றனர்.இந்நிலையில் போராட்டம் வன்முறையாக மாறி ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகள் தீவைத்து கொழுத்தப்பட்டுள்ளன.வன்முறையை காரணமாக இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது.
அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன். தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் தீர்வு இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வெற்றியடையாது என தெரிவித்தார்.