• Fri. Apr 26th, 2024

ஆண்டிபட்டி திமுக பெண் கவுன்சிலருக்கு வரதட்சனை கொடுமை செய்த கணவர் கைது. கள்ளக்காதலி மீது வழக்குப்பதிவு .

ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு- மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் 5வது வார்டு திமுக ஒன்றியக்கவுன்சிலர் உமாமகேஸ்வரி . இவர் இவரது கணவர் வேல்முருகனுடன் கடமலைக்குண்டு நகரில் வசித்துவருகிறார் .

திமுக பெண் கவுன்சிலரின் கணவர் வேல்முருகன் அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் தனது கள்ளக்காதலியான ஒரு பெண்ணுடன் தகாதஉறவு வைத்துக்கொண்டு வரதட்சனைகேட்டு உமாமகேஸ்வரியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது .

இதுகுறித்து பலமுறை கணவரை கண்டித்தும் அவர் கேட்காததால் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுககவுன்சிலர் உமாமகேஸ்வரி புகார் அளித்ததை அடுத்து ,அவரது பரிந்துரையின் பேரில் ஆண்டிபட்டி மகளிர் காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வந்தனர் . உமாமகேஸ்வரியின் புகாரில் முகாந்திரம் இருந்ததால் அவரது கணவர் வேல்முருகன் மற்றும் அவரது கள்ளக்காதலி அண்ணாநகரை சேர்ந்த பிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, வேல்முருகனை கைது செய்து பிரியாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .

கள்ளக்காதலியுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு திமுக பெண் கவுன்சிலரையே அவரது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *