உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இதற்குப் பின்னால் சுவாரஸ்யமூட்டும் வரலாறே இருக்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தும் முந்தைய காலங்களில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்படவில்லை. அந்த காலகட்டத்தில் ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. மார்ஷியஸ் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட மார்ச் மாதம் முதல் மாதமாக இருந்தது. அதனால் மார்ச் மாதம் தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.அதைத் தொடர்ந்து ரோமானிய மன்னரான போம்பிலியஸ் 2 மாதங்களை சேர்த்து மொத்தம் 12 மாதங்களாக்கினார். ஜனஸ் என்னும் ரோமானியக் கடவுளின் நினைவாக ஜனவரியஸ், பிப்ரவரியஸ் ஆகிய மாதங்கள் சேர்க்கப்பட்டன.
புகழ்பெற்ற மன்னரான ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். அதில் தான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பின்பற்றும் கிரிகோரியன் காலண்டருடன் ஒத்திருந்தது. கடவுள் ஜனஸைக் கவுரவிக்கும் விதமாக ரோமானியர்கள் அம்மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாக கொண்டாட ஆரம்பித்தனர்.எனினும் இதில் பல்வேறு குழப்பம் நீடித்த நிலையில் இறுதியாக கி.பி. 1500-களில் போப் கிரிகோரி என்பவர், லீப் ஆண்டை உருவாக்கி புதிய காலண்டரை உருவாக்கினார்.இதைத்தொடர்ந்து கிரிகோரியன் காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இதைத்தான் இன்று நாம் பின்பற்றி, புத்தாண்டை கொண்டாடி வருகிறோம்.
எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு முன் கதையும் வரலாறும் இருந்துக்கொண்டே தான் உள்ளது.