பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பதைப் போல் பேய் என்றால் ஊரே நடுங்கும் என்பதையும் நாம் அறிந்திருப்போம். நாம் சிறுவயதில்பல பேய் கதைகள் கேட்டு வளர்ந்திருப்போம். அந்த வகையில் பேய்க்கு பயந்து இரவு 9 மணிக்கு மேல் மக்கள் வெளியே வரவே பயப்படுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா..?? ஆமாம் இப்படியும் ஒரு ஊர் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது T. புதுக்கோட்டை என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் தூக்கு போட்டு இறந்தவர் மற்றும் விஷம் குடித்து இறந்தவர்களின் ஆத்மா அந்த ஊர் மக்களை தொந்தரவு செய்வதாக கூறப்பட்டு வருகிறது. T.புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் மூன்று தலைமுறையாக இரவு 9 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடை பற்றி தெரிந்து கொள்வதற்கு அந்த கிராமத்தில் உள்ள பெரிய சுப்பிரமணி என்ற 50 வயது முதியவரை நேரில் சென்று கேட்டபோது அவர் திடிக்கிடும் நிகழ்வுகளை கூறினார்.
T. புதுக்கோட்டை கிராமம்
அங்குள்ள கருவேல குகைக்குள் யாரும் தனியாக செல்லக்கூடாது என்று கூறினார். நாம் முன்னால் சென்றாலும் நம்மை பேய் பின் தொடரும் என்றும் நம்பப்படுகிறது. பேய் அடித்த நபரை அந்த ஊர் சாமியாடி விபூதி போட்டு அந்த ஆத்மாவை விரட்டி விடுவார் என்று சொல்லப்பட்டு வருகிறது. விரட்ட முடியாத ஆத்மாவை அசல் ஊருக்கு சென்று விரட்டுவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அல்லது சிறு குழந்தைகளாக இருந்தாலும் வெளியில் சொல்வதற்கு பயத்துடன் இருப்பதாக கூறினார். பாதிக்கப்பட்ட நபரை பார்க்க முடியுமா என்று நம்து தரப்பில் கேட்டபோது அவர்களை பார்ப்பதற்கு தடுத்தனர். அந்த கருவேல குகை இருக்கும் இடத்திற்கும் பார்க்க அனுமதிக்கவில்லை. நீண்ட வற்ப்புறுத்தலுக்கு பிறகு அந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று சொல்லி அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் கருவேல குகை அடர்ந்து காணப்பட்டது. அந்த இடத்தில் பகுதி தொலைவில் மட்டுமே உள்ளே சென்று பார்க்க அனுமதித்த ஊர் மக்கள் இதற்கு மேல் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி அந்த இடத்தை விட்டு வெளியேறுவது நல்லது என்று கூறினார்கள்.இதுகுறித்து மேலும் தெரிந்துக்கொள்ள அந்த ஊரில் வசிக்கும் முத்தம்மாள் என்பவரிடம் பேட்டி எடுத்தோம். 10 வருடமாக இந்த பேய் நடமாட்டங்கள் இருப்பதாகவும் ஆனால் சாதாரண மக்கள் கண்களுக்கு பேய்கள் தெரிவத்தில்லை எனவும் கூறினார்.
T. புதுக்கோட்டை கிராமம்
இவ்வளவு பயத்துடன் ஒளிந்து வாழும் இக்கிராம மக்களின் நிலை இப்படியே போய்விடுமா… இது வெறும் மூட நம்பிக்கையா, கட்டுக்கதையா அல்லது நிஜம் தானா… உங்கள் பார்வையில் இக்கிராமம் எப்படி தெரிகிறது..??
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]
- ஜூன் 7ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.200க்கும் மேற்பட்டோர் உயிழந்த […]
- குமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் துறவியின் பயணம்கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆத்ம சித்தர் லெட்சுமி அம்மா இருச்சக்கர வாகனத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கினார். […]
- சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி , நூல் வெளியீட்டு விழாசென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023திரை […]
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]