• Wed. Apr 24th, 2024

பாராளுமன்றத்தில் கடும் அமளி -2 மணி வரை ஒத்திவைப்பு

ByA.Tamilselvan

Feb 2, 2023

ஜனாதிபதி உரை விவாதம் நடைபெற இருந்த நிலையில் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டதால் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை, பிரதமர் மோடி வரவேற்றார். இந்நிலையில், பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஜனாதிபதி உரை விவாதம் நடைபெற இருந்த நிலையில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க அனுமதி கோரினர். மேலும், அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் பாராளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *