கே கே மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சென்னை அடையாறில் உள்ள ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்றது.
தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினரும் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான சுதா சேசையிபட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருந்தியல் மருந்தாக்கியல் துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருவதாகவும் இத்துறை பல்வேறு துறைகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது என்றும் கூறினார்.இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் கே.ஆர்.ஆறுமுகம், துணைத் தலைவர் பாபு,கல்லூரி முதல்வர் மீனா,துணை முதல்வர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.