நாகப்பட்டினம் மாவட்டம் பொராவாச்சேரியில் ஆண்டவர் செவிலியர் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி 3 வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. கல்லூரி தாளாளர் நடராஜன் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் 2019 – 20 கல்வி ஆண்டில் பயின்ற மாணவிகளுக்கு மருத்துவர் அன்சாரி கலந்துக்கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவிகள் செவிலியர்களுக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில் கல்லூரி செயலாளர் தமிழ்செல்வி, முதல்வர் கோமதி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.