தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மொத்தம் உள்ள 8,100 தனியார் பள்ளிகளில் உள்ள 1.10 லட்சம் இடங்களில் சேர இதுவரை 65,000- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ள பெற்றோர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் https://rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.