• Mon. May 6th, 2024

ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர்தூவி மரியாதை..,

ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினர். விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் கிழக்கு பகுதி கழகம் சார்பாக காளிமுத்து நகர், திருத்தங்கல் மேற்கு பகுதி கழகம் சார்பாக மேலரதவீதி, திருத்தங்கல் கிழக்கு பகுதி கழகம், 23வது வட்ட கழகம் சார்பாக திருத்தங்கல் குறுக்குப்பாதை, சிவகாசி மேற்கு மற்றும் கிழக்கு பகுதி கழகம் சார்பாக சிவகாசி பஸ் நிலையம், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக நாரணாபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி கழகச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆரோக்கியராஜ், வெங்கடேஷ், புதுப்பட்டி கருப்பசாமி, லட்சுமி நாராயணன், மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்.பிலிப்வாசு, விருதுநகர் மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரமணா, விருதுநகர் மேற்கு மாவட்ட முன்னாள் எம்.ஜி.ஆர் இணைச்செயலாளர் சீனிவாசப்பெருமாள், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் என்.சி.ஓ காலனி மாரிமுத்து, விருதுநகர் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையது சுல்தான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், தலைமை கழக பேச்சாளர் சின்னத்தம்பி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளர் தொகுதி கணேசன், சிவகாசி மாநகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கார்த்திக், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் முத்துராஜ், 23வது வட்ட கழக செயலாளர் செல்வின், இளைஞர் அணி சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மாயாண்டி, துணை செயலாளர் வல்லவராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலபாலாஜி மற்றும் கட்சியின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *