




மாண்புமிகு திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ MP அவர்களிடம்
கந்தர்வகோட்டை பகுதி மக்கள் , கந்தர்வகோட்டை நகரில் பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளும் வண்ணம் , கந்தர்வகோட்டை சிவன் கோவிலுக்கு திருமண மண்டபம் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.

இன்று சென்னையில் உள்ள அவர்களது இல்லத்திற்கு பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்களை வரவழைத்து தொடர்புடைய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களிடம் மக்களின் கோரிக்கையினை நேரடியாக மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த பொழுது ,அமைச்சர் அவர்களும் செய்து தருவதாக தெரிவித்து உள்ளார்கள்.

மேலும் பல்வேறு பொது கோரிக்கைகள் தொடர்பாகவும் மக்களின் கோரிக்கைகளை கேட்டு கொண்டு மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள்.

