தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த மாதம் நாளை (23) மற்றும் 24-ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீனவர்களின் போராட்டம் காரணமாக கச்சத்தீவு திருவிழாவில் இந்த ஆண்டு இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை என ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.
- நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படும் சின்னச் சுருளி அருவி… ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்
- லாடனேந்தல் கிராமத்தில் ஒரே நாளில் ஏழு கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா
- இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி…
- 75 ஆண்டு காலம் இல்லாத வெப்பத் தாக்கத்தினால் காய்ந்த ஏலக்காய் செடிகள்-ஏலக்காய் விலை உயர்வால் விவசாயிகள் கவலை
- கோவையில் 300 அடி அகல சுவர் ஓவியம் இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்கள் (ஐஐஐடி) சங்கம் கோவை கிளை சார்பில் வரையப்பட்டது