• Sun. Apr 28th, 2024

முதல்முறையாக வனத்துறை காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு

Byவிஷா

Jan 30, 2024

தமிழகத்தில் முதல்முறையாக வனத்துறை காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, 363 வனக்காவலர் பணியிடங்களுக்கும், 814 வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இன்று முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *