• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்..,

ByS.Ariyanayagam

Dec 16, 2025

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கருப்பன்மூப்பன்பட்டியை சேர்ந்த இருளப்பன் இவர் தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று அங்கிருந்த 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடியது

தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்புதுறையினர் மீட்பு வலை மூலம் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.