விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த வசந்தம் நகரில் பத்மநாதன் (வயது 40 ) இவரது வீட்டில் சாரைப்பாம்பு சமையலறையில் இருப்பதாக வீட்டினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரின் நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்து சமையலறையில் இருந்த சாரைப்பாம்பை பத்திரமா மீட்டு வனப்பகுதி விட்டனர்.
