• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நிதி உதவி

திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்தஉதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் திருநாதகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன

பின்னர் கோவில் திருத்தோர் பணிக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் திருத்தேர் பணிக்கு முதற்கட்டமாக நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை, மாவட்ட துணைசெயலாளர் வீரா முத்துசாமி, தேசியம்பட்டி சங்கர், துணை பொருளாளர் வாசு மாதன், பெட்டி முருகன் உட்பட மன்ற நிர்வாகிகள், ஊர் நாட்டாமைகள் பஞ்சாயத்து தலைவர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.