• Fri. Mar 29th, 2024

யானைகளின் இறப்பு குறித்த மத்திய அரசின் ஷாக்கிங் ரிப்பொட்

Byமதி

Nov 29, 2021

2020 – 21 ஆண்டில், 85க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழநதுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அதில் 65 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது என்ற அதிர்ச்சியான தகவலையும் கூறியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மக்களவையில் இன்று தெரிவித்துள்ள தகவலின்படி, ‘புலிகளை பொறுத்தவரை 2018 -34 புலிகளும், 2019 -17 புலிகளும்; 2020 – 7 புலிகளும் கொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இது யானையில் உயிர் இழப்பிற்கு பல்வேறு காரணங்களையும் கூறியுள்ளது. அதன்படி, மின்சாரம் தாக்கியதில் 2018-19 ம் ஆண்டில் 81 யானைகளும்; 2019-20ல் 76 யானைகளும்; 2020-21ல் 65 யானைகளும் உயிரிழந்துள்ளது.

ரயில் மோதியதால் 2018-19 ம் ஆண்டில் 19 யானைகளும்; 2019-20 ம் ஆண்டில் 14 யானைகளும்; 2020-21 ம் ஆண்டில் 12 யானைகளும் உயிரிழந்துள்ளது.

இதுமட்டுமின்றி, வேட்டையாடப்பட்டது மற்றும் விஷம் வைத்து 2018-19 ம் ஆண்டில் 15 யானைகளும்; 2019-20 ம் ஆண்டில் 9 யானைகளும்; 2020-21 ம் ஆண்டில் 16 யானைகளும் கொல்லப்பட்டுள்ளது.

வனவிலங்குகளை கொல்லுதல் மற்றும் துன்புறுத்தல் தடுப்பு சட்டங்கள் கீழ் 2018 -ம் ஆண்டில் 1099 பேரும்; 2019 -ம் ஆண்டில் 1506 பேரும், 2020 -ம் ஆண்டில் 1231 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *