ரஷியாவின் ரைசான் பிராந்தியத்தில் உள்ள துப்பாக்கி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்து தொழிற்சாலையில் பயங்கிர வெடி விபத்து ஏற்ப்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 170- தீ ஆணைப்பு துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தற்போது வரை சரியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.