ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ,காமராஜ், சி.விஜய பாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
தேவர் குருபூஜையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் புறக்கணிகவில்லை,
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவின் காரணமாக வர இயலவில்லை. துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உடல்நலக்குறைவு காரணமாக வர இயலாத காரணத்தினால் சென்னையில் மரியாதை செலுத்தினார் என திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தார்.