ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் காவல்துறையின் முதல்வராக எடப்பாடி தான் இருக்கிறார் என்று எங்களுக்கு தோன்றுகிறது. உடனடியாக விமான நிலையத்தில் ராஜேஸ்வரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடைபெறும். -அமமுக அமைப்புச் செயலாளர் மகேந்திரன் பேட்டி
மதுரை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக அமமுக வெளிநாடு வாழ் தமிழர்கள் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் என்பவரை மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினர் தாக்கிய நிலையில். அமமுகவினர் மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் புகாரை எடுக்கவில்லை என்று சாட்சி எழுந்ததால் அமமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான உசிலை மகேந்திரன் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆன காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை அவனியாபுரம் காவல் நிலையம் வந்து புகார் மனுவை ஏற்று நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன் கூறுகையில்:
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடியை கண்ட எங்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் அவர் செய்த துரோகங்களை உணர்ச்சிவசப்பட்டு கோஷமிட்டு சொல்லியுள்ளார். முன்னாள் முதல்வராக இருந்தவர் இந்த சம்பவத்திற்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு தன்னுடன் வந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தன்னுடைய பாதுகாவலர்களை வைத்து ராஜேஸ்வரனை மிருகத்தை தாக்குவது போல் தாக்கியிருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய 5மணி நேரமாவிட்டது தமிழக காவல்துறை தற்போது வரை சிஎஸ்ஆர் போடுவதற்கு கூட யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆனாலும் காவல்துறையின் முதல்வராக எடப்பாடி தான் இருக்கிறார் என்று எங்களுக்கு தோன்றுகிறது. உடனடியாக இந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடைபெறும்.
அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கிரி கிருஷ்ணமூர்த்தி மகன் மற்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கி அவர் கையில் இருந்த செல்போனை திருடி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்தி உள்ளோம் அப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால் சட்ட போராட்டம் மேற்கொள்ள தயாராக உள்ளோம். எங்கள் பொதுச் செயலாளருக்கு தகவல் தெரிவித்தோம் சட்டப்படி என்ன நட வடிக்கை இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி, அவரது பாதுகாவலர் கிருஷ்ணன், செந்தில்நாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் அரவிந்த், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளோம்.
- உதகை மாரியம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்கு அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலாஉதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்குஅலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா […]
- தென்காசி அருகே குளிர்பானக்கடையில் தீ விபத்துபுளியங்குடியில் குளிர்பான கடையில் தீ 1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி யது தொடரும் […]
- உதகை தாவரவியல் பூங்காவில் 5 வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கையை முன்னிட்டு தொழிலாளர்கள் ஐந்தாவது நாளாக […]
- வேடச்சந்தூர் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை..!திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை […]
- போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், […]
- குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழைகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி […]
- நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம்..!நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு […]
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாசிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை […]
- பல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் வைர விழாபல்லடம் அருகே அல்லாளபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைர விழா நடைபெற்றது. […]
- இலக்கியம்விஷா நற்றிணைப் பாடல் 146: வில்லாப் பூவின் கண்ணி சூடிநல் ஏமுறுவல் எனப் பல் ஊர் […]
- சிவகாசியில் ‘நம்வீட்டு மாடித்தோட்டம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி..!விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ‘நம் வீட்டு மாடித்தோட்டம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு […]
- முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு..,
பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்..!திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, அவ்விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு […] - தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தருணா போராட்டம்: மாநிலத் தலைவர் […]
- நத்தம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.நடைபெற்ற இந்த கும்பாபிஷேக […]
- மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தின் புணரமைப்பு பணிகள் துவக்கம்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புணரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் […]