அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று காலை இபிஎஸ்க்கு ஆதரவாக வந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ் க்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழந்தன. இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மூடி மறைக்கப்பட்ட பல அதிர்ச்சியான தகவல்கள் தெரிய வந்துள்ளதால் விசாரணையை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுக்குழு தீர்ப்பு வெளியான அடுத்த 3 மணி நேரத்தில் இந்த அதிர்ச்சியான செய்தி வெளியானதால் மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்பு கலக்கமடைந்துள்ளது.