• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இ.பி.வெண்ணெய்..தமிழகத்துக்கு சுண்ணாம்பா?

ByA.Tamilselvan

Oct 5, 2022

இமாச்சலில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் பணிகள் இன்னும் துவங்கவேயில்லை.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல் பிரதேசத்தில் பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார்.4 வருடங்களுக்கு முன் இமாச்சலில் எய்ம்ஸ் அமையவுள்ளது என அறிவிக்கப்பட்டு மிக சரியாக 4 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டு அங்கே எய்ம்ஸ் திறந்துவைத்துள்ளார் பிரதமர் மோடி . ஆனால் கிட்டதட்ட அதே நேரத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு கிடைத்ததோ எல்லைச்சாமி கணக்கா ஒற்றை செங்கல் மட்டுமே . செங்கலோடு நாம் திருப்பதிபட்டுக்கொள்ள வேண்டுமா? வடக்கு வாழ்கிறது தெற்கு?