• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் நிகழ்ச்சி..,

BySeenu

Jul 8, 2025

கோவை மாவட்டத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை, ஐந்து ஆண்டுகளில் முதல்வராக இருந்து கேட்ட திட்டங்களை வாரி வழங்கிய, கோவை மாவட்டத்திற்கு யாரும் செய்ய முடியாத திட்டங்களான அத்திக்கடவு – அவிநாசி திட்டம், ஏர்போர்ட் விரிவாக்கம், மெட்ரோ ரயில் அறிவிப்பு, என அறிவிப்பு வெளியிட்டு மூன்று கோடி ரூபாயை ஒதுக்கினார்.

அதிகமான பாலங்கள் சாலைகள் கூட்டுக் குடிநீர் திட்டம் அரசு மருத்துவமனை மேம்பாடு என, சேட்டை திட்டங்களை எல்லாம் கொடுத்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். எடப்பாடி முதல்வராக இருந்த போது, நானும் அமைச்சராக இருந்தேன், கோயம்புத்தூருக்கு தேவை என கேட்டவர்களை நேரில் அழைத்துச் சென்று அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறேன். நாம் என்ன கேட்டாலும் அவர் நிச்சயம் அதை செய்து கொடுத்தார். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் கூட, யார் ? என்ன கூறினாலும் அதை சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசுக்கு எடுத்துரைத்துக் கொண்டு இருக்கிறார்.

கோவை ராசியான மாவட்டம் என்பதால், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி இருக்கிறோம். கடந்த 2010 ம் அம்மா ஜெயலலிதா அவர்கள்தங்களுடைய பிரச்சாரத்தை இங்கு இருந்து தொடங்கி தான் கோட்டைக்கு சென்றார். அதேபோல எடப்பாடி அவர்களும் அவருடைய பிரச்சாரத்தை இங்கு இருந்து தான் ஆரம்பித்து இருக்கிறார். நிச்சயமாக 2026 தேர்தலில் வென்று கோட்டையை பிடிப்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. கடந்த நான்கு வருடங்களில் உங்களுக்கு தி.மு.க எதுவுமே செய்திருக்காது. ஆனால் உங்களுக்கு எல்லாம் செய்து கொடுக்கும் முதல்வராக எடப்பாடி இருந்து இருக்கிறார், இருப்பார் என்பதால் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினருடன் எடப்பாடி பழனிசாமி உரையாடல் மேற்கொண்டார்.

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு, அடுக்கு மாடி குடியிருப்பு நல சங்கத்தின் சார்பில்,

மத்திய அரசு QCOBA என்ற சட்டம் கொண்டு வந்ததால் மூலப்பொருட்கள், வேற நாடுகளில் இருந்து இங்கே கொண்டு வருவதற்கு இல்லாமல் செய்திருக்கிறார்கள். இரண்டே இரண்டு பெரிய நிறுவனங்கள் தான் இந்தியாவில் இருக்கிறார்கள். இதனால் சர்வதேச ஆர்டர்களை பெற முடிவதில்லை.

அ.தி.மு.க ஆட்சியில் பொருளாதார மேம்பாடு இருந்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக, மின் கட்டண உயர்வு, நிலை கட்டண உயர்வு, போன்றவை உயர்த்தப்பட்டதால் மாநிலத்தை விட்டே வெளியே செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. எட்டு கட்டங்களாக போராட்டம் நடத்தி இருக்கிறோம் ஆனால் எந்த கட்டணத்தையும் அவர்கள் குறைக்கவில்லை. நாங்கள் இயந்திரங்களை இயக்கினாலும் இயக்கவில்லை என்றாலும் பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை இன்று உருவாகி இருக்கிறது. வரி உயர்வாய் யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை. குறைகளை சொல்ல முடியாத அளவுக்கு இந்த திமுக நடைபெறுகிறது.

அதேபோல அடுக்குமாடி குடியிருப்பில், தொடர்ந்து வரி செலுத்தி கொண்டு தான் இருக்கிறோம். அங்கு குப்பை வரி என்று ஒன்று போடுகிறார்கள். ஏற்கனவே மாநகராட்சிக்கு வீட்டு வரியோடு சேர்ந்து குப்பை வரி செலுத்துகிறோம். ஆனால் குடியிருப்பில் குப்பை வரி என்று மீண்டும் ஒன்று வசூலிக்கப்படுகிறது, அது இல்லாமல் தனியார் குப்பை எடுப்பவர்களிடமும் வரி கொடுக்க வேண்டி இருக்கிறது. அதனால் குப்பை வரியை எடுக்க வேண்டும். இரண்டாவது தண்ணீர் வரி, ஒரு குடியிருப்பில் பத்து வீடுகள் இருக்கிறது என்றால் அங்கு நான்கு ஐந்துக்கு மட்டுமே கனெக்சன் கொடுக்கப்படுகிறது. ஆனால் வீடொன்றுக்கு 10,000 வீதம் டெபாசிட் வசூலிக்கப்படுகிறது. குடிநீருக்கு கமர்சியல் வரி கட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. நீங்கள் நிச்சயம் எங்களுக்கு நல்லது செய்து கொடுப்பீர்கள் என நினைத்து மனு கொடுக்கிறோம் என பேசினார்.

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் சார்பாக பேசியவர்கள்,

2020 கொரோனா நிலையில் கூட எங்களுடைய தொழிலில் தாக்குப் பிடித்து முன்னேறினோம். ஆனால் தி.மு.க ஆட்சியில் tarri f அதிகப்படுத்தியதற்கு , தொழில் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. இந்த தொழிலில் இருந்து நிறைய பேர் வெளியில் சென்று விட்டார்கள். தொழில் விரைவில் காணாமல் போகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த தொழிலுக்காக வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டி இருக்குமோ என்று அவல நிலை இருக்கிறது. நிறைய லேபர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வருகிறார்கள். அவர்களையும் ஏதாவது காரணம் சொல்லி அனுப்பி விடுகிறார்கள். தொழில் நன்றாக இருந்தால் செலுத்த வேண்டிய வரியை நாங்கள் நிச்சயம் செலுத்தி விடுவோம். ஆனால் தொழிலுக்கு உண்டான மூலப் பொருட்களின் விலைகளையே உயர்த்தும் போது மிகவும் நலிவடைகிறோம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆக இருந்த கோயம்புத்தூரில் தற்போது பருப்பி விளைச்சல், இல்லாமல் சென்று விட்டது. பருத்தி விளைச்சல் விவசாயத்தை ஊக்குவிப்பதே இல்லை. அதற்கு உண்டான முயற்சிகளை நீங்கள் எடுத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் பொதுச்செயலாளர் பிரதாப் சேகர் பேசும்போது,

சிறு தொழில் செய்பவர்கள் மட்டுமே ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர், கோவையில் உள்ளனர். ஆனால் இன்று மின் கட்டண உயர்வால் எவ்வளவு நலிவடைய முடியுமோ ? அவ்வளவு நலிவடைந்து விட்டனர். நிலை கட்டணம் மிகவும் பெரிய தாக்கத்தை உண்டாக்கி விட்டது. 450 யூனிட் ஓட்டுகிறார்கள் என்றால் 8,500 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. ஒரு யூனிட்டு இருக்கு 19 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அமைப்பின் மூலமாக பல கட்ட போராட்டம் நடத்தையும் எந்த தீர்ப்பும் கிடைக்கவில்லை. எங்களுடைய குமுரல்களை யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை. பலரின் வாழ்வாதாரத்தை இந்த மின் கட்டணம் தான் பாதித்திருக்கிறது. ஒருபுறம் கூலியாக்களின் சம்பளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது, ஒருபுறம் மின்கட்டண உயர்வு, நிறைய பேர் வாடகைக்கு தான் கம்பெனி வைத்து இருக்கிறோம். அனைத்திற்கும் வரி போட்டு, வசூல் செய்வதால், வாழ்வாதாரம் பாதித்து நிற்கிறோம். நிலை கட்டணம் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை உங்கள் ஆட்சியில் நிச்சயம் குறைத்து தரவேண்டும் என கூறினார்.

அதேபோல கோவைக்கு ஒரு குறுந்தொழில்பேட்டை அமைக்க வேண்டும் – 2026 ல் நீங்கள் போடும் முதல் கையெழுத்து கோவைக்கு குறுந்தொழில் பேட்டை என்பதாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். GSTயை 18 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும். தொழில் நடத்துவதில் இதனால் மிகுந்த சிரமம் இருக்கிறது என குறுந்தொழில் கூட்டமைப்பினர் கூறினர்.

மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர், பரமேஸ்வரன் பேசும்போது

கிட்டத்தட்ட 12 வருடங்கள் இந்தியாவே சந்திக்காத போராட்டத்தை நடத்தினோம். மடி பிச்சை ஏந்தி போராட்டம் நடத்திய போது அம்மா ஜெயலலிதா உடனடியாக அதற்கு செவி சாய்த்தார். அப்பொழுது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்றுவிட்டது. அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள், இழப்பீடு வழங்குவதை சரியாக முன் நின்று செய்து கொடுத்தார். ஒரு ஏக்கருக்கு நான்கு கோடி ரூபாய் கொடுத்தது கோயம்புத்தூரில் தான். இனி எதிர்காலத்தில் எங்கு நிலம் எடுத்தாலும், எடப்பாடி யார் ஆட்சியில் என்ன கொடுத்தார்களோ அதை கொடுக்க வேண்டும். அப்படி ஒரு இழப்பீடு பெற்றுக் கொடுத்த வருங்கால முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவிநாசி ரோட்டையின் திருச்சி ரோட்டையும் இணைப்பதற்கு ஒரே வழி, விமான நிலையத்திற்கு இடம் எடுத்தது மட்டும்தான். எடுக்கப்பட்ட நிலங்களில் 60 அடி விட்டு சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக சொன்னார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக அதற்கான எந்த முயற்சியும் இல்லை. மீண்டும் அதற்கான மனுவை இன்று உங்களிடம் தான் கொடுக்கிறோம் என கூறினார்.

விவசாயிகள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் பேசும் போது

விமான நிலையத்திற்காக நிலம் எடுத்ததில் நல்ல விலைக்கு எங்களுக்காக முடித்துக் கொடுத்தீர்கள், ஆனால் அங்கு சர்வீஸ் சாலை வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்து இருந்தோம். மகாத்மா காந்தி சாலையை சித்ராவுடன் இணைத்து ரிங் ரூடாக செய்துவிட்டால் மிகவும் சவுரியமாக இருக்கும். கடந்த நான்கு வருடங்களாக அது கிடப்பில் கிடக்கிறது அதை நீங்கள் தான் சரி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அம்மன்குளம் மகளிர் கூட்டமைப்பினர் சார்பாக பேசியவர்கள்

அம்மா ஜெயலலிதாவின் ஆட்சியில் சுழல் நிதி 20000; ரூபாய் கொடுத்துக் கொண்டு இருந்தார். ஆனால் தற்போதைய ஆட்சியில் அதை பத்தாயிரம் ஆக குறைத்து விட்டனர். அதிலும் நிறைய குழுக்களுக்கு அதை மானிய தொகையாக கொடுக்கவே இல்லை. அதிகாரிகளிடம் கேட்கும் போது அதற்கான எந்தவித பதிலும் இல்லை. குழுவில் கடன் கொடுக்கும் பொழுது கடனில் மானியம் கிடைத்தது. ஆனால் தற்போது வட்டி மானியமாக மாற்றி அதுவும் கிடைக்காமல் போய்விட்டது. குலுக்கல் மூலமாக அம்மா கொடுத்த இரு சக்கர வாகனம் மானிய வண்டியை, மகளிருக்கு வாங்கி கொடுத்தோம். ஆனால் இம்முறை அதை இல்லாமல் செய்து விட்டார்கள். அதை நிச்சயம் நீங்கள் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கிரில் தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர் பேசும்போது,

கிரில் தொழிலாளர்கள் விளிம்பு நிலையில் இருக்கும் தொழில் செய்து வருகிறோம். உங்களுக்கு நிறைய இடர்பாடுகள் உள்ளது, கடந்த 15 ஆண்டு காலமாக, இலவச மின்சாரம் கேட்டு போராடிக் கொண்டு இருக்கிறோம். 500 இலவச மின்சாரம் கொடுக்க வேண்டும். மாநிலம் முழுவத் நிறைய தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும். மாவட்ட தலைநகரங்கள் அனைத்திலும் என்னுடைய பொருட்களை காட்சிப்படுத்த, மாநகராட்சி எல்லையில் 10 cent இடம் அலர்ட் செய்ய வேண்டும் உள்ளிட்ட கைகளை மனுவாக முன் வைத்தனர்.

தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பில் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் சங்கத்தினர் சார்பில், தங்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்து இருக்கிறீர்கள். இந்தியாவிலேயே குரு சிறு நடுத்தர தொழில் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதில் தான் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதனால் அ.தி.மு.க ஆட்சி இருக்கும் வரை அந்த தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தது. தொழில் செய்ய முடியாத நிலைமை வரும்பொழுது கூட அதற்கான உதவிகளை செய்தது. ஆனால் இன்றைய ஆட்சியில் தங்களுக்கு ஏற்பட்டு உள்ள பிரச்சனைகள் அந்த பிரச்சனையினால் எவ்வளவு இழப்பு சரிவு என்பதையெல்லாம் நீங்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். இது ஒரு மிகவும் முக்கியமான தொழில். சாதாரண மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில். இதில் நிச்சயம் நாங்கள் கவனம் செலுத்துவோம். இதில் முக்கியமாக நீங்கள் கூறியிருப்பது மின்கட்டண உயர்வைதான் சொல்லி இருக்கிறீர்கள். நிச்சயம் இதற்காக எங்களால் முடிந்த சலுகைகளை நிச்சயம் செய்து கொடுப்போம்.

அதேபோல நமது மாநிலத்தில், ராணுவ தளவாட இடங்கள் அமைப்பதற்காக அதிமுக ஆட்சியில் மத்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசுடைய தொடர்பு இல்லாத காரணத்தால், நம்ம சைக்கி வேண்டிய திட்டங்கள் எல்லாம் கிடைக்காமல் போய்விட்டது. நிச்சயமாக அவர்களின் ஆதரவோடு அண்ணா.தி.மு.க ஆட்சி அமைக்கின்ற பொழுது, மத்திய அரசோடு மீண்டும் இணைந்து ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த தொழிற்சாலை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும்.

அதோடு தென்னிந்திய ஜவுளி உற்பத்தி சங்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, ஜவுளி என்பது மிகவும் முக்கியமான தொழில். கோவை ஈரோடு திருப்பூர் சேலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுமே ஜவுளி உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு உண்டான மூலப்பொருள் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து பயன்படுத்துகிறோம். நானும் விவசாயியாக இருப்பதனால் கூறுகிறேன் பருத்தி பயிரிட்டால் அதை எடுப்பதற்கு யாரும் வருவது இல்லை ஆட்கள் கிடைப்பது இல்லை. அதற்குப் போதிய ஆட்கள் இல்லாததால் பருத்தி உற்பத்தி செய்கிற நிலை குறைந்துவிட்டது. வெளிநாடுகளில் பருத்தி சாகுபடியில் என்ன டெக்னாலஜிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்தோம். இதற்கு நவீன முறையில் பருத்திகள் எப்படி எடுப்பது என்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டோம். ஆனால் ஒரு கட்டத்திற்கு வரும்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது இந்த தொழில்கள் நலிவ டையாமல் பார்த்துக் கொண்டோம்.

அதேபோல விவசாயிகளுக்கு தேவையான நிறைய திட்டங்களை அ.தி.மு.க ஆட்சி கொடுத்தது. நாம் எவ்வளவு தான் தொழில் செய்தாலும் உணவு என்பது முக்கியம். உணவு நீர் இல்லாமல் நாம் வாழ முடியாது. அதற்கு நாம் முன்னுரிமை கொடுத்து விவசாயிகளுக்கு எந்த அளவில் பாதுகாப்பு கொடுக்க முடியும் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும் என கருதி தேசிய அளவில் krish விருதை நாங்கள் தொடர்ந்து ஐந்தாண்டுகளும் பெற்றோம். உயர்நிலையை பாதுகாக்க கூடிய அவசியம் ஏற்பட்டது. ஏரி, குளம், குட்டைகளை நிறைய தூர்வாரி வெட்டினோம். வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு உரமாக கொடுத்தோம். இயற்கை உரமாக அது இருந்தது. விவசாயிகளுக்கும் நல்ல விளைச்சல் கிடைத்தது.

அதேபோல விமான நிலைய விரிவாக்கம் நிச்சயம் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் கோவை என்பது தொழில் வளம் நிறைந்த மாநிலம். வெளிநாடுகளில் இருந்து வந்து செல்வதற்கு விமான நிலையம் மிகவும் முக்கியம்.. அதேபோல தன்னுடைய சொந்த நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் தவிப்பதையும் புரிந்து கொள்ள முடியும். விவசாயியாக இருக்கும் பொழுது உங்களுக்காகத் தான் நான் நிச்சயம் பேசுவேன். ஆனால் ஒரு முதல்வராக இருக்கும்பொழுது அனைவருக்கும் பொதுவானவனாக இருக்க வேண்டும். ஒரு நிலத்தை கொடுக்கும் பொழுது உயிர் பிரிந்தால் எப்படி இருக்குமோ ? அப்படித் தான் ஒரு விவசாயிக்கு இருக்கும். காலங்காலமாக தங்களிடம் இருக்கும் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளை பொது பயன்பாட்டிற்கு கொடுக்கும் போது பல்வேறு பிரச்சனைகளை கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் இங்கு வந்திருக்கிற நிலம் கொடுப்பாளர்கள் நிலம் கொடுக்க தயார் என கொடுத்து இருக்கிறீர்கள். மாவட்டம் வளர்ச்சி அடையும் என்பதால் நிலங்களை கொடுத்து இருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எந்த அளவீடு இழப்பீடு பெற்று தர முடியுமோ அதற்கெல்லாம் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். உங்களுக்கு தேவையான மாற்று நிலம் கூட நாங்கள் பெற்றுக் கொடுத்து இருக்கிறோம். தேவையான இழப்பீட்டுத் தொகையை எவ்வளவு பெற்றுக் கொடுக்க முடியுமோ ? அவ்வளவு பெற்றுக் கொடுத்திருக்கிறோம். திமுக எதிலும் சிக்கல் உண்டாக்குவார்கள், அதேபோல இதுலயும் பிரச்சனை செய்தார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசோடு இணைந்து விமான நிலைய விரிவாக பணிகள் முற்றிலுமாக முடிக்கப்படும்.

சுயநிதி குழுக்கள் இங்கு அவர்களுடைய கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள்,
ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போது எங்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தாலும், சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை பார்த்து விட்டு தான் அம்மா மேடையில் சென்று அமர்வார். அவர் பெண்ணாக இருந்த காரணத்தால், பெண்களின் தொழிலுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பார். நிச்சயமாக அதிமுக ஆட்சிக்கு வரும்போது அவர்களின் தேவை அறிந்து நிதி வழங்கப்படும். அதேபோல நம் மத்திய அமைந்தவுடன் அம்மா இருசக்கர வாகனத்திற்கான மானிய நிதியும் வழங்கப்படும்.

கிரில் உற்பத்தி மற்றும் தங்க நகை உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கைக்கும் உடைய பரிசீலனை செய்து அவர்கள் கேட்ட அனைத்தும் அதிமுக ஆட்சியில் செய்து கொடுக்கப்படும். அதேபோல அவர்கள் மின் கட்டணத்தை குறைக்க மனு கொடுத்து இருக்கிறார்கள் அதுவும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் குறைக்கப்படும். நிலை கட்டணத்தையும் அ.தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் நிச்சயம் பரிசீலிக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல பத்திரிகையாளர்கள் நல வாரியத்தினர் கோரிக்கை வைத்து உள்ளனர், பத்திரிக்கையாளர்கள் என்பது ஒரு நாட்டினுடைய தூண், ஆனால் தி.மு.க ஆட்சி வந்த பிறகு, எதையும் போட முடிவதில்லை. ஆனால் இங்கு பேசியவர்கள் அவர்களுடைய மனக்குறைகளை எடுத்துக் கூறுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்யத்தான் கட்சிகள் இருக்கிறது. பிரச்சனையை தீர்க்கிற அரசாங்கமாக திமுக இல்லை.பிரச்சனையை உருவாக்குகிற அரசாக தான் தி.மு.க இருக்கிறது.

அதேபோல அ.தி.மு.க ஆட்சியில், கோவையில் 130 பேருக்கு கோவையில் சலுகை விலையில் மனை பட்டா வழங்கப்பட்டது. இன்னும் பல பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை கிடைக்கவில்லை என கூறி இருக்கிறீர்கள். நிச்சயமாக விடுபட்ட பத்திரிக்கையாளர்களுக்கு ஆட்சி அமைத்த பிறகு உங்களையும் கவனிக்கும். நாங்க எவ்வளவு திட்டங்களை கொண்டு வந்தாலும் நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்லும் பணியை செய்கிறீர்கள்.

எங்களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் நிறைய செய்வோம். நீங்கள் உண்மையை செய்தியாக சொன்னால் போதும். எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. நாங்கள் உழைக்கும் உழைப்பு மக்களிடம் சென்று சேர வேண்டும் என என்னுடைய கோரிக்கையாக உங்களிடம் வைக்கிறேன் எனக் கூறினார்.