• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

அரசு மருத்துமனையில் மின் தூக்கி பழுது..,

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மின் தூக்கி (LIFT) பழுதால் நோயாளிகள், மற்றும் பொது மக்கள் அவதி. விருதுநகர் அரசு மறுத்துவ மனைக்கு நாள் தோறும் நூற்றுக்கனக்கான புற நோயாளிகள் வருகின்றனர்.

மேலும் உள் நோயாளிகளும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்நிலையில் இங்குள்ள மின் தூக்கி நீண்ட நாட்களாக பழுதாகி உள்ளதால் பொது மக்கள் மற்றும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர், இது குறித்து கல்லூரி மாணவர் ஒருவர் கூறுகையில் “இங்கு எனது உறவினர் ஒருவர் உள் நோயாளியாக அட்மிட் செய்யப்பட்டு உள்ளார்.

நான் அவரது இரத்த மாதிரி கொடுத்து விட்டு திரும்புகையில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், ஒரு மின் தூக்கி பழுதாகி நின்று போனதாலும் மிக சிரமத்திற்கு ஆளானேன், இனி மேலாவது மருத்துவ மனை நிர்வாகம் இது போன்ற குறைகளை சீர் செய்து மக்கள் துயரம் போக்க வேண்டும் என்றார்”.