நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் பொங்கல் கொண்டாடப்பட்டது.
முதுமலை, தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் வெளி மண்டல துணை இயக்குநர் முன்னிலையில் பொங்கல் மற்றும் பழங்கள் கொடுத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்!