• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழையால் மின்சார ரயில்கள் ரத்து..!

Byவிஷா

Dec 4, 2023

மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிறு அன்று காலை புயலாக வலுப்பெற்றது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பக்க சென்னையின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
புயல் சென்னையை நெருங்குவதன் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையினால் ரயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரயில்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட ரயில் மெதுவாக ஊர்ந்து 6 மணிக்குத்தான் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தது. மேலும் தண்டவாளங்களில் வெள்ளம் அதிகமாக சூழ்ந்திருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. காற்று மற்றும் மழையின் வேகம் அதிகமாக இருப்பதால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காற்றின் வேகம், மழை மற்றும் தண்டவாளத்தில் தேங்கியுள்ள வெள்ள நீர் காரணமாக பாதுகாப்பு கருதி, சென்னையில் மின்சார ரயில்கள் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.