• Tue. Feb 10th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பழனி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்..,

ByS.Ariyanayagam

Feb 10, 2026

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்த பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம், கணக்கன்பட்டி ஊராட்சியில் இருந்த கோம்பைப்பட்டி கிராமத்தை பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சியோடு இணைத்ததற்கு மறுப்பு தெரிவித்தும், தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டியும் வட்டாரவளர்ச்சி அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக கோம்பை பட்டி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.