பழனி அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு பணம், டிவி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தெற்கு லட்சலப்பட்டியை சேர்ந்த கருப்பாத்தாள்(70) இவரது வீட்டிற்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நுழைந்து கருப்பாத்தாளை தாக்கி கட்டிப்போட்டு ரூ.16 ஆயிரம் பணம் மற்றும் LED டிவி ஆகியவற்றை திருடி சென்றனர்.
மேற்படி சம்பவ இடத்தில் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




