ஏடிஎம் கார்டு இல்லாமல் மிகவும் எளிதான வகையில் ஷாப்பிங் செய்யும் வசதியை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
ஷாப்பிங் செய்பவர்கள் ஈசியாக பர்ச்சேஸ் செய்வதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சூப்பர் வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல் எளிதில் சாப்பிங் செய்யமுடியும். இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது பொதுத்துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி. இது பிஎன்பி ஒன் என்ற சேவையை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த ஆப் வாயிலாக நாம் டெபிட் கார்டு இல்லாமல் ஷாப்பிங் செய்து கொள்ள முடியும். உங்கள் கையில் போன் மட்டும் இருந்தால் போதும் அந்த போனில் நீங்கள் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து வைத்திருந்தால் ஈசியாக ஷாப்பிங் செய்து கொள்ளலாம். கையில் எப்போதும் ஏடிஎம் கார்டை தூக்கி கொண்டு அலைய தேவையில்லை.