நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது கிடையாது…
தமிழர்களின் நாட்டுப்பற்றுக்கு பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்க தேவையில்லை. அதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்… அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
தன்னுடைய ஒவ்வொரு பிரச்சார உரைகளிலும், தமிழர்களின் நலனை எடுத்து கூறுவதுடன், அதிமுக, பாஜகவினால் தமிழகத்துக்கு கிடைத்த அதிருப்திகளை பட்டியலிட்டும் வருகிறார். முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “திமுக அரசின் ஆட்சியை தென் மாநில ஊடகங்கள் மட்டுமல்லாது, வட மாநில ஊடகங்களும் பாராட்டி வருகின்றன. இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் என்ற பெருமையை விட தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வருவதுதான் என்னுடைய லட்சியம்.. அதிமுக ஆட்சியை போல் கணக்கு காட்டுவதற்காக இல்லாமல், திமுக அரசு ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 902 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் பெறப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. வீரமங்கை வேலுநாச்சியாரையும், வஉசியையும் பாரதியையும் டெல்லி குடியரசு தின விழா ஊர்தி அணிவகுப்பில் அனுமதிக்க மறுத்தார்கள்… அதனாலென்ன? எங்கள் தமிழ்நாட்டு வீதிகள்தோறும் அவர்கள் வலம் வரட்டும் என்று அந்த அலங்கார ஊர்தியை விடுதலை போராட்ட எழுச்சியோடு அனுப்பினோம்..
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மக்களுக்குச் சாப்பிட ரொட்டி கிடைக்கவில்லை என்ற போது, கேக் வாங்கிச் சாப்பிடட்டும் என்று ஒரு ராணி சொன்னாரே, அதுமாதிரி, “துப்பாக்கிச்சூடு குறித்து நான் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என்று சொன்னவர் சர்வாதிகாரி அல்லவா?
இந்த ஆட்சி மலர்ந்த இந்த 8 மாத காலத்தில் இதுவரை 5 அனைத்து கட்சிக் கூட்டத்தை இந்த அரசு நடத்தி இருக்கிறது… சட்டமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்தான் அதிக நேரம் பேசுகிறார்களே.. இதை விட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும்? என்னைச் சர்வாதிகாரி என்று சொல்லிய பழனிசாமி, நான் பொம்மை என்றும் இதற்கு முன்பு சொல்லி இருக்கிறார். மக்கள் கொடுத்த தோல்வியில் என்ன பேசுவது என்றே தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருக்கிறார்..
அதிமுக ஆட்சியின்போது பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார் ஸ்டாலின், இப்போது 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று சொல்லி வருகிறார்.. நான் 5 ஆயிரம் கொடுக்கச் சொன்னது, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரண நிதியாகத்தான் கொடுக்க சொன்னேன். திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரு தவணைகளில் 4 ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டோம்… ஆனாலும் திசை திருப்பும் பொய்களை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் பச்சை பொய் பழனிசாமி.
நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, 110-ன் கீழான அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் இந்த 8 மாதங்களில் வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு விட்டன.. எங்களைக் குறை சொல்வதற்கு எதுவும் கிடைக்காதவர்கள் இந்து சமய அறநிலையத் துறையைப் பற்றி தேவையற்ற வதந்திகளைக் கிளப்பி வருகிறார்கள்.
மதத்தை வைத்தோ, சாதியை வைத்தோ அரசியல் செய்யவில்லை. இது எதையும் பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, “யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை” என்பார்கள். அதைப் போல இந்த 2 யோக்கியர்களைப் பற்றியும் நாட்டுக்குத் தெரியும். இவர்கள் ஆட்சி நடத்திய முறையைப் பற்றியும் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று ஸ்டாலின் கூறினார்.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]