• Sun. Sep 24th, 2023

பேனா சின்னம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவரின் டிஎன்ஏவை பரிசோதிக்க வேண்டும்-கே.எஸ்.அழகிரி

Byகாயத்ரி

Aug 4, 2022

கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதில் என்ன தவறு..? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் அருகே தமிழக அரசு சார்பில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்று, நடுக்கடலில் 134 அடி உயரத்திற்கு கருணாநிதிக்கு பேனா வடிவில் ரூ.80 கோடியில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மெரினா கடலில் கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதில் எந்த தவறும் இல்லை. கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம். கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவு சின்னம் அமைத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுபவர்களின் டிஎன்ஏவை (மரபணுவை) பரிசோதிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குள்ளான கருத்ததை தெரிவித்தார்.

Related Post

விஸ்வகர்ம சமூக மாணவர்களின் கல்லூரி கல்வி கனவை தடுக்கும் மோடி.., இரா.முத்தரசன் கடுமையான குற்றச்சாட்டு…
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்னாச்சு… மது கடைகளை அடைக்க சொல்லி கருப்பு சட்டை அணிந்து நடத்திய போராட்டம் என்னாச்சு… தி.மு.க.விற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சரமாரி கேள்வி..!
காவிரி நதிநீர் தீர்ப்பை செயல்படுத்தமல் கர்நாடக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *