• Mon. Apr 29th, 2024

சோழவந்தான், முள்ளிப்பள்ளத்தில் திமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரம்

ByN.Ravi

Apr 1, 2024

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளி பள்ளம் திமுக கிளை கழகம் சார்பில் கட்சி அலுவலகத்தில் இருந்து கிளைச் செயலாளர் கேபிள் ராஜா தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு கிராமம் முழுவதும் தெருத்தெருவாக வாக்குகள் கேட்டு சென்றனர் .
இதில், கிளைக் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *