வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுக.வுக்கு அழைப்பு விடுத்துள்ளது தி.மு.க.
தற்போது காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பிப்பரவரி 3ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், பிப்ரவரி 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், அதே நாளில் மதிமுகவுடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க சார்பில், இதற்கான முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.