நீங்கள் உடற்பயிற்சி செய்வதை பார்க்கவா மக்கள் வாக்களித்தனர்? என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரசாரம் மாநிலம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-
இந்திய நாட்டிலேயே சிறப்பாக செயல்படும் முதன்மை முதலமைச்சர் என்று, தன்னைத் தானே மு.க.ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் ஆனது முதல் தற்போது வரை என்ன செய்தீர்களை என்பதை சொல்ல முடியுமா?
பத்திரிகைகளும், ஊடகங்களும்தான் மு.க.ஸ்டாலினை உயர்த்திப் பிடிக்கின்றன. கடந்த 9 மாதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் செய்கிறார். ஈ.சி.ஆர்.ரோட்டில் சைக்கிளில் போகிறார். பிரமாண்டமாக போய்க் கொண்டிருக்கிறார். டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார். நடைபயணம் மேற்கொள்கிறார். ஜிம்முக்கு சென்று உடற் பயிற்சி செய்கிறார். இதெல்லாம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. இவை நல்லதுதான். ஆனால் நீங்கள் செய்வதையெல்லாம் எதற்காக டிவியில் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் உடற்பயிற்சி செய்வதை பார்க்கத்தானா மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர்? நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது.
ஒரு முதலமைச்சர் என்றால் 234 தொகுதியில் இருக்கிற மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். அதை உடனுக்குடன் செய்து முடித்தால்தான் மக்களுக்கு பலன் ஏற்படும். அவ்வாறு எனது ஆட்சியில் மக்கள் பிரச்னை தொடர்பான எந்த ஃபைலும் நிலுவையில் வைக்கப்படவில்லை. உடனுக்குடன் கையெழுத்திடப்பட்டு பிரச்னைகள் தீர்க்கப்பட்டன.
நீட் தேர்வை அதிமுகதான் கொண்டு வந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இது தொடர்பாக விவாதிக்க தயாரா என்று அவர் சவால் விடுத்துள்ளார். இதை நான் ஏற்கிறேன். ஆனால் துண்டுச் சீட்டு ஏதும் இல்லாமல் அவர் பங்கேற்க வேண்டும்.
கிராமப்புற மாணவர்கள், ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியவில்லை. அதனால் மருத்துவக் கல்வி கற்க முடியவில்லை. 2010-ல் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சிந்தனைத் துளிகள்• உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன […]
- பொது அறிவு வினா விடைகள்1.அரபிக் கடலின் அரசி?கொச்சி2.அதிகாலை அமைதி நாடு?கொரியா3.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?காஷ்மீர்4.புனித பூமி?பாலஸ்தீனம்5.ஆஸ்திரேலியாவின் முன் கதவு?டார்வின் நகரம்6.மரகதத் தீவு?அயர்லாந்து7.தடுக்கப்பட்ட நகரம்?லாசா8.பண்பாடுகளின் […]
- குறள் 210:அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று […]
- திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்து – பொதுமக்கள் அவதிசாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்து- பொதுமக்கள் உதவியுடன் தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு […]
- பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வுபொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.பி.இ, […]
- தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் ஓரிரு […]
- வாட் வரியை குறைக்க சொல்வதில் நியாமில்லை -பழனிவேல் தியாகராஜன்மாநிலஅரசுகளை வாட்வரியை மத்திய அரசு இப்போது குறைக்க சொல்வது நியாயமில்லை- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு.பெட்ரோல், […]
- பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு -காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.முன்னாள் […]
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு -ப.சிதம்பரம் கருத்துபெட்ரோல் விலையை ரூ10 உயர்த்திவிட்டு ரூ9.50 குறைத்திருப்பது கொள்ளை அடிப்பதற்கு சமம்என ப.சிதம்பரம் கருத்துதெரிவித்துள்ளார்.மத்திய அரசு […]
- பெட்ரோல், டீசல் விலை குறைப்புசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவும் […]
- 2024 தேர்தலையொட்டி மொழி சர்சையை கிளப்புகிறார் மோடி -கே.பாலகிருஷ்ணன் பேட்டிபிரதமர் மோடி 2024 தேர்தலையொட்டி மொழியை பயன்படுத்தி சர்சையை கிளப்புகிறார் என சிபிஎம் மாநில செயலாளர் […]
- இந்து சமய அறநிலைத்துறை உடனடி வேலை! சம்பளம் 26,600 முதல் 75,900 வரை.., உடனே அப்பிளே பண்ணுங்க!டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு மூலமாக கோயில் நிர்வாக அதிகாரியாக இளைஞர்களுக்கு ஒர் அருமையான வாய்ப்பு.10வகுப்பு, […]
- பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய கோரிக்கைசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்யக்கோரி சாத்தூரில் தேசிய சிறு ரக தீப்பெட்டி உற்பத்தியாளர் […]
- அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்- பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்பை […]
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]