• Wed. Jan 28th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மனு வழங்கிய தர்மா..,

ByS.Ariyanayagam

Dec 6, 2025

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து திருப்பரங்குன்ற விவகாரம் சம்பந்தமாக மனு வழங்கப்பட்டது. பீமாராவ் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு இமக சத்திரியர்கள் பேரவை சார்பாக மாநிலத் தலைவர் மலைக்கோட்டை தர்மா அவர்கள் தலைமையிலும் சிறப்பு அழைப்பாளராக சிவசேனா தமிழகம் மாநில தலைவர் சி கே பாலாஜி கலந்து கொண்டார்.

மதுரை திருப்பரங்குன்றம் இந்துத் தமிழன் கலாச்சாரமான கார்த்திகை தீபம் 100 ஆண்டுகளுக்கு மேலாக போராடி” சிறை சென்று பல்வேறு வழக்குகள் வாங்கி நடைமுறைப்படுத்தாமல் இருந்தது. மீண்டும் கார்த்திகை தீபம் இந்த வருடம் மூன்றாம் தேதி ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதை திட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் திராவிட மாடல் அமைச்சர் சேகர்பாபு அவர்களையும். திருப்பரங்குன்றம் இந்து அறநிலை துறை அதிகாரியும் அவர்களையும் பணி நீக்க செய்ய வேண்டும் என்று… மதுரை எம்பி வெங்கடேசன் அவர்கள் தொடர்ந்து இந்து தமிழன் கலாச்சாரத்தை தவறாக பேசி சித்தரித்து வருகிறார். அவரை கைது செய்து வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பீமாராவ் ஜீஎன்ற அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அவரிடம் மனு வழங்கியுள்ளது.