• Mon. Apr 29th, 2024

டிச.4ல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Byவிஷா

Dec 2, 2023

பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.15-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளன.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி நிகழாண்டுக்கான திறனறித் தேர்வு கடந்த அக். 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தம் 2.36 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்வு முடிவுகள் தேர்வுத்துறை இணையதளத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களின் முடிவுகளை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், இந்த ஊக்கத் தொகைக்கான தேர்வுப் பட்டியல் விவரங்களும் தேர்வுத்துறை வலைதளத்திலேயே வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *