முன்னணி நடிகர்களான விஷால், கார்த்தி மற்றும் நாசருக்கு வாட்ஸப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசில் புகார் அழைக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் மூன்று பேரும் தற்போது நடிகர் சங்க பொறுப்புகளில் இருந்து வரும் நிலையில், அதே சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் துணை நடிகை ராஜ துரை என்பவர் தான் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்.கடந்த மே 27ம் தேதி அவர் வாட்சப்பில் அனுப்பிய ஆடியோவில் மிக அசிங்கமாக பேசியது மட்டுமின்றி கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்.இது பற்றி சென்னை தேனாம்பேட்டை போலிசிடம் நடிகர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.