கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் வழக்கில் சிறையில் இருந்த பள்ளி நிர்வாகிகள் இன்று காலை ஜாமீனில் வெளிவந்தனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சேலம் சிறையில் இருந்து பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,தாளாளர் ரவிக்குமார், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேர் இன்று காலை ஜாமீனில் வெளியே வந்தனர். ஜாமினில் வந்துள்ள அவர்கள் விசாரணையின் போது தலைமறைவாகவோ அல்லது சாட்சியங்களை அழிக்கக்கூடாது என்று நீதிமன்றும் கூறியுள்ளது.