சீனாவின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் நம்நாட்டிற்கு ஆபத்து ஏற்படுவதாக ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லைப்பகுதியில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் அமைதியாக காப்பது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்று ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். மேலும் மோடி சீனாவை கண்டு பயப்படுகிறார். மக்களிடமிருந்து உண்மையை மறைக்கிறார். ராணுவத்தை குறைத்து மதிப்பிடுகிறார் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.