• Fri. Mar 29th, 2024

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்து ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்ந்துள்ளதை தொடர்ந்து தற்போது வீட்டு உபயோகத்திற்காக சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது மாதம் இரு முறை மாற்றி அமைப்பது வழக்கம். கடந்த 5 மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்த்தப்படாத நிலையில் தற்போது ரூ.50 உயர்த்த பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.917-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்து சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.967-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 11 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *