• Sun. Apr 28th, 2024

அரசு டாஸ்மார்க் மதுபான கூடத்தை மாற்ற கோரி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்கவிளை கோழிவிளை பகுதியில் செயல்படும் அரசு டாஸ்மார்க் மதுபான கூடத்தை மாற்ற கோரி, கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் ஊர் மக்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை கோழிவிளை பகுதியில் அரசு டாஸ்மார்க் மதுபானக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கூடம் அருகே பள்ளிகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி இரவு புத்தாண்டின் கொண்டாட்டத்தின் மருத்துவர் ஒருவர் இந்த டாஸ்மார்க் மதுபானகூடத்தில் வைத்து, குத்தி கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதி டாஸ்மாக் மதுபான கூடம் இருப்பதினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த டாஸ்மார்க் மதுபான கூடத்தை மாற்றக்கோரி, கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில், அப்போது ஊர் மக்கள் சேர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *