ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்கஙாநல்லூர் பஞ்சாயத்து உட்பட்ட இ எஸ் ஐ காலணி முதல் வேட்டை பெருமாள் கோவில் முதல் குப்பைமேடு வரை சாலை வசதி மற்றும் வாறுகால், லைட், சுகாதாரம், போன்ற அடிப்படை வசதிகள் செய்து தராத ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ராமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசையும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர கிளை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..