கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட மருத்துவர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
சேலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டி எடுக்கப்பட்ட பாறை கனிமங்களை தனியார் கல் குவாரிகளுக்கு விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவர் விஜயபாஸ்கர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லிய கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிபவர் மருத்துவர் விஜயபாஸ்கர். இவர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை வளாகத்தை விரிவாக்கம் செய்கிறேன் சுத்தப்படுத்துகிறேன் என்று கூறி மருத்துவமனை வளாகத்தை ஒட்டி உள்ள மலையில் இருக்கும் பெரிய அளவிலான பாறைகளை உடைத்து தனியாருக்கும் கல் குவாரிகளுக்கும் விற்று பல லட்சம் ரூபாய் பண முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , மேலும் அரசு மருத்துவமனையில் நல்ல நிலையில் உள்ள கட்டடங்களையும், ஒரு வருடத்திற்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடங்களையும் இடித்து தரைமட்டமாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது .எனவே இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து பேட்டியளித்த அதே பகுதியைச் சேர்ந்த தங்க வளவன் என்பவர் கூறுகையில்,’ மருத்துவர் விஜயபாஸ்கர் மல்லியகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வருகிறார் .
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் பணிபுரிந்து பணியிட மாறுதல் பெற்று வெளியூருக்கு சென்ற இந்த நிலையில், அண்மையில் மீண்டும் மல்லியகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு வந்து, இங்கேயே பணிபுரிந்து வருகிறார் .
நல்ல நிலையில் உள்ள மருத்துவமனை கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார் .அதேபோல மருத்துவமனை வளாகத்தை விரிவாக்கம் செய்கிறேன் சுத்தப்படுத்துகிறேன் என்று கூறிவிட்டு மருத்துவமனை வளாகத்தை ஒட்டி உள்ள மலையில் இருக்கும் பெரிய அளவிலான பாறைகளை உடைத்து தனியாருக்கும் கல்குவாரிகளுக்கும் விற்று வருகிறார். இதில் பல லட்சம் ரூபாய் அவர் பணம் சம்பாதித்து இருக்கிறார். இதே போல கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு வருகையில் அவர்களுக்கு சத்தான மதிய உணவு வழங்க வேண்டும் .ஆனால் இவர் பதவியேற்ற நாள் முதல் எந்த உணவும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டது இல்லை .மேலும் பிரசவித்த தாய்மார்களுக்கு மூன்று வேளையும் சாப்பாடு வழங்க வேண்டும். ஆனால் இவர் வழங்கவில்லை. குடும்ப கட்டுப்பாடு செய்யும் பெண்களுக்கு மூன்று வேளையும் சாப்பாடு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை மருத்துவர் விஜயபாஸ்கர் வழங்கவில்லை. அதே நேரத்தில் தாய்மார்களுக்கு சத்தான உணவு வழங்கியதாக போலி ரசீது தயார் செய்து அரசு ஒதுக்கிய நிதியை கொள்ளையடித்து வருகிறார். எனவே இவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவ அலுவலர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]