வணிக கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை ரூ.1925.50ஆக இருந்த சிலிண்டர் விலை, இன்று முதல் 1937 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கப்பட உள்ள நிலையில், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அதிகாலையிலேயே வணிக சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் இந்திய சந்தையில் கேஸ் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று பிப்ரவரி 1ம் தேதி வணிக சிலிண்டரின் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை 1925 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த கேஸ் சிலிண்டர், இன்று முதல் 1937 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து வணிக கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருவதால், உணவகங்களில் உணவுப் பொட்ருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது வெளியூர்களில் தங்கி உணவகங்களை நம்பி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பெரும் சுமையாய் கருதப்படுகிறது. அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி அதே 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.