பெட்ரோல் விலை குறைந்ததால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வாகன ஓட்டிகள் படையெடுத்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைக்கப்பட்டது. கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.55-க்கும், டீசல் 93.54-க்கும் விற்பனையானது.
அதேவேளை கடலூரை ஓட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் நேற்று ரூ.94.99-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடலூரில் உள்ள வாகன ஓட்டிகள் புதுச்சேரிக்கு படையெடுத்தனர். அவர்கள் தங்கள் வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்குகளில் முழு கொள்ளளவையும் நிரப்பினர். இதனால் புதுச்சேரி எல்லை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.