• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

ByT. Vinoth Narayanan

Mar 5, 2025

05.03.2025 இன்று திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத்_தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வார்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி, பள்ளி தலைமை ஆசிரியர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர் துர்கா, அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.